கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை விஷு நிகழ்ச்சி நடைபெறு வழக்கம். இவ்வாண்டைய சித்திரை விஷு நிகழ்ச்சி இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற சித்திரை விஷு மற்றும் காய்கனி வழங்கும் விழாவில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.