சுதந்திரதினத்தில் ரத்த தானம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது

73பார்த்தது
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேங்காப்பட்டணம் தவ்ஹீத் ஜமாத் கிளை மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி இணைந்து இரத்ததான முகாம் இன்று நடை பெற்றது.
தேங்காப்பட்டணத்தில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் சல்மான் பாரிஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாத் மாவட்ட நிர்வாகிகள், அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர். ரதீஷ் கலந்து கொண்டனர்.
மற்றும் மருத்துவ குழுவினர், தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அனீஸ், பொருளாளர் ஆசிக் ரஹ்மான், துணைத் தலைவர் அகமது நவாப், துணைச் செயலாளர் அன்சாரி, மற்றும் ஏராளமான பொதுமக்கள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். முடிவில் இரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி