ஏழகரம் பெருமாள் சுவாமி கோயிலில் இன்று ஆவணி தேரோட்டம்

78பார்த்தது
நாகர்கோவில் ஏழகரம் ஸ்ரீ பொன் பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோவில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி ஆலயத்தில் இருந்து பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தினமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் திருவிழா இன்று (14-ம் தேதி) தேர் திருவிழா நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி