கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவிலான கன்னியாகுமரி அருள்மிகு தேவி பகவதியம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா மே-14 கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று இரவு அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.