இருளர் குடியிருப்பு மந்தமாக நடக்கும் கட்டுமான பணிகள்

51பார்த்தது
இருளர் குடியிருப்பு மந்தமாக நடக்கும் கட்டுமான பணிகள்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான நெடுமரம், பாக்கூர், கொடூர், மடையம்பாக்கம் போன்ற கிராமங்களில், 40க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் சொந்தமாக வீடு இல்லாமல், நீர்நிலை புறம்போக்கு மற்றும் மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர்.

சொந்த வீடு மற்றும் வீட்டுமனை வேண்டி, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்சிவிளாகம் கிராமத்தில், 33 இருளர் குடும்பத்தினருக்கு வீடு கட்ட, அரசு சார்பாக இடம் தேர்வு செய்யப்பட்டது.

அங்கு, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகட்ட, கடந்த ஆண்டு பிப். , 23ம் தேதி பூமி பூஜை போடப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.‌ பணிகள் துவங்கி 20 மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை அடித்தளம் அமைக்கும் பணி மட்டுமே நடந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி