தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு வட்டக்கிளை சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், நேற்று ஓய்வூதிய நாள் விழா நடந்தது.
இதில், துணைத் தலைவர் முருகன், பொருளாளர் கலியமூர்த்தி, மாநில துணைத்தலைவர் எட்டியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "