குற்றம் சாட்டப்பட்ட நபர் கோரி காவல்துறை சார்பில் அறிவிப்பு

72பார்த்தது
குற்றம் சாட்டப்பட்ட நபர் கோரி காவல்துறை சார்பில் அறிவிப்பு
"காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் பதியப்படும் வழக்குகள் விவரம் மற்றும் குண்டத்தடுப்பு சட்டம் மற்றும் பொது அறிவிப்புகள் என பல்வேறு செய்தி குறிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் ,

இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் சரவணபாண்டியன், ஆ/வ-40/2005, த/பெ சுப்பையன், எண் -84. காமராஜர் தெரு, காஞ்சிபுரம், தற்சமயம் எண் -4F. மேல வீதி, திருவாரூர் நகரம், திருவாரூர் மாவட்டம் என்பவர் மீது காஞ்சிபுரம் மாவட்டகுற்றப் பிரிவு குற்ற எண் -24/2005 இன்படி குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். (அல்லது குற்றம் செய்துள்ளவராக சந்தேகப்படுகிறது) மற்றும் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணை அவர் காணக் கிடைக்காமல் திரும்பி வந்துள்ளது. மற்றும் அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். (அல்லது மேற்கொள்ளப்பட்ட பிடி ஆணையை தவிர்ப்பதற்காக தாமாகவே பதுங்கியுள்ளார்) என்று என் கவனித்திற்கு. 24/2005 5/1 120-B, 420, 211 r/w 511 IPC. C. C. No. 314/2021 இன்படி குற்றம் சாட்டப்பட்ட சரவணபாண்டியன் என்பவர் மீது மேற்கொள்ளப்பட்ட வழக்கு / புகாருக்கு பதில் அளிக்க வேண்டி வரும் 28. 08. 2024 ஆம் தேதிக்குள் JM -1, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக இந்த அறிவிப்பின் மூலம் ஆணையிடப்படுகிறது. "

தொடர்புடைய செய்தி