"ஏ. டி. எம். , இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது

72பார்த்தது
"ஏ. டி. எம். , இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரகடம் பகுதியில், தனியார் வங்கி ஏ. டி. எம். , மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12: 00 மணிக்கு, மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து, ஏ. டி. எம். , மையத்தில் நுழைந்து, கற்களால் ஏ. டி. எம். , இயந்திரத்தை உடைக்க முயன்றார். பின், உடைக்க முடியாததால் விட்டு சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார், ஏ. டி. எம். , மையத்தில் உள்ள 'சிசிடிவி' கேமராவை ஆராய்ந்து, மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில், ஒரகடம் அடுத்த காரணிதாங்கல் பகுதியில் சுற்றித்திரிந்த, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 23, என்பரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வேலை தேடி சென்னை வந்ததாகவும், கையில் பணம் இல்லாததால், ஏ. டி. எம். , இயந்திரத்தை உடைத்தாகாவும் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். "

தொடர்புடைய செய்தி