மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் மதுவிலக்கு அமல்
பிரிவு சார்பில் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு
பேரணி நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில்
அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் பரிபூரணம் முன்னிலையில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம்
பஜார் வீதி ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக மாணவர்கள் பதாகைகள் ஏந்தி
பேரணியாக நடந்து வந்தனர்.