விமான நிலைய பணியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

81பார்த்தது
சென்னை விமான நிலைய சர்வதேச கார்கோ பிரிவில், அலுவலகப் பணியாக வந்திருந்த, தனியார் நிறுவன ஊழியர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.

சென்னை கிழக்கு தாம்பரம் மணிமேகலை தெருவில் வசித்து வந்தவர் சங்கரநாராயணன் (54). இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சங்கரநாராயணன் அலுவலகப் பணியின் காரணமாக, சென்னை விமான நிலைய சர்வதேச கார்கோ பிரிவிற்கு வந்தார். இரவு 10. 30 மணி அளவில், அங்கு பணியில் இருந்தபோது, சங்கரநாராயணன் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதை அடுத்து விமான நிலைய கார்கோவில் பணியில் இருந்த ஊழியர்கள், உடனடியாக சங்கரநாராயணனை, சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சங்கரநாராயணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இதோடு அவருக்கு திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, சங்கரநாராயணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி