கள்ளத்தனமாக குட்கா விற்ற 11 கடைகளுக்கு 'சீல்'

63பார்த்தது
கள்ளத்தனமாக குட்கா விற்ற 11 கடைகளுக்கு 'சீல்'
தாம்பரம் அடுத்த சோமங்கலம், நடுவீரப்பட்டு, நல்லுார், காட்டரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து சோமங்கலம் போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், வழக்கு பதியப்பட்ட 11 கடைகளுக்கு, நேற்று சென்ற காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அக் கடைகளின் உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கினர். தவிர, தலா 30, 000 ரூபாய் அபராதம் விதித்து, தற்காலிகமாக 15 நாட்களுக்கு 'சீல்' வைத்தனர்.

தொடர்புடைய செய்தி