தியாகதுருகம் அருகே போலி மருத்துவர் கைது

83பார்த்தது
தியாகதுருகம் அருகே போலி மருத்துவர் கைது
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சரவணன்(49) என்பவர் டிப்ளமோ , ஐடிஐ படித்துமுடித்துள்ளார். இவர் தியாகதுருகம் அருகே உள்ள விருகாவூரில் மெடிக்கலில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அங்கு அவர் தான் மருத்துவர் என கூறி மக்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் வந்து போலியாக மருத்துவம் பார்த்த சரவணனிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வரஞ்சரம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி