பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடலா?. உழைத்துக் களைத்த பணியாளர்களுக்கு ஓய்வுக்கால பயன்களை வழங்குவதில் அரசு நிர்வாகம் காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை. தொழிலாளர்களுக்கும் ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வுக்கால பயன்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.