ஜோதிடத்தை நம்பி 38 நாள் குழந்தையை கொன்ற சொந்த தாத்தா.!
![ஜோதிடத்தை நம்பி 38 நாள் குழந்தையை கொன்ற சொந்த தாத்தா.!](https://media.getlokalapp.com/cache/61/37/613767e29acf417f1086fd29a8c0f77d.webp)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்ற வழக்கில் குழந்தையின் சொந்த தாத்தா வீரமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையால் உயிருக்கு ஆபத்து, கடன் பிரச்சனை ஏற்படும் என ஜோதிடர் ஒருவர் சொன்னதை நம்பிய வீரமுத்து குழந்தையை கொலை செய்துள்ளார். அந்த ஜோதிடரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.