நோயாளியை எட்டி உதைத்த காவலாளி (வீடியோ)
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு வந்த ஒரு நோயாளி ஊழியர்கள் மட்டுமே செல்லும் லிப்டில் ஏறி செல்ல முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரிடம் உள்ளே செல்லக்கூடாது என கூறியுள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் மனிதாபிமானமற்ற முறையில் அந்த நோயாளியை அடித்து கீழே தள்ளி உதைத்தனர். இந்த தாக்குதல் குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.