விநாயகர் ஊர்வலம்: டிராக்டர் விபத்தில் 3 சிறுவர்கள் பலி

73பார்த்தது
விநாயகர் ஊர்வலம்: டிராக்டர் விபத்தில் 3 சிறுவர்கள் பலி
தேனி மாவட்டம் தேவாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி