சன் டிவியில் ரோஜா சீரியல் மூலமாக பிரபலமான நடிகை பிரியங்கா நல்கரி கடந்த வருடத்தில் தான் அவருடைய காதலரை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தன்னுடைய கணவர் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்று கேள்விகள் எல்லோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேட்டதற்கு ஆம் என பதில் சொல்லியதுடன், அதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் வைத்துள்ளார். இதனால் அவர் கணவரை பிரிந்துவிட்டார் என்றே தெரிகிறது.