பெருந்துறை சிப்காட் தொழிற்சாலையில் இயங்கப்படும் தனியார் ஸ்டீல் கம்பெனியிலிருந்து வெளியேறப்படும் நச்சுக் கழிவுகளை ஆட்டையாம்பாளையம் வழியாக செல்லக்கூடிய ஓடையில் கலந்துவிட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில் ஆட்டையாம்பாளையம் பகுதியில் இருந்து குளத்துப்பாளையம் வழியாக செல்லக்கூடிய அந்த ஓடையில் இந்த நச்சுக் கழுவு முழுவதும் தேங்கி நின்றதால் குளத்தில் வளர்ந்து வரக்கூடிய மீன்கள் மற்றும் அருகாமையில் விவசாயிகளால் வளர்த்து வரக்கூடிய கோழிகள் ஆடுகள் போன்றவை அந்த குடிநீரை அருந்தி மிகவும் மோசமான நிலைக்கு சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
ஆகையால் சம்பந்தப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டு குளத்திலிருந்து பரிசோதனை செய்வதற்காக அந்த தண்ணீரை எடுத்துச் சென்றுள்ளனர் அதன்படி இந்த கழிவுகள் ஸ்டீல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டு அதிலிருந்து வெளியேறும் நச்சு கழிவுகள் என இப்பகுதி மக்களிடம் தெரிவித்ததாக கூறுகின்றனர்
ஆகையால் அப்பகுதி மக்கள் இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்