பெருந்துறையில் மயங்கி விழுந்த மின்வாரிய அதிகாரி சாவு

607பார்த்தது
பெருந்துறையில் மயங்கி விழுந்த மின்வாரிய அதிகாரி சாவு
பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மயங்கி விழுந்த மின்வாரிய அதிகாரி இறந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

பெருந்துறை, காஞ்சிகோவில் ரோடு, தாஸ்கண்ட் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து(59). இவர் சென்னிமலை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வேலை முடிந்து பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்ஸில் வந்துள்ளார் அங்கு பஸ் விட்டு இறங்கியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you