கோபிசெட்டிபாளையம்: குடியிருப்புக்குள் புகுந்த மான்..வீடியோ!

5541பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூடக்கரை, குமரன்நகர் பகுதியில் வனபகுதியிலிருந்து வழி தவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி. என் பாளையம் வனப்பகுதியில், புலி சிறுத்தை கரடி செந்நாய் மான் காட்டுப்பன்றி காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன, இந்த நிலையில் கூடக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மான் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது, குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்திச் சென்றுள்ளது,

அச்சத்தில் அந்த மான் குமரன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று பதுங்கியுள்ளது, இதனை அறிந்த அந்த வீட்டின் உரிமையாளர்கள் மானை துரத்தி வந்த நாய்களை அங்கிருந்து விரட்டிவிட்டு இது குறித்து டி. என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டி. என் பாளையம் வனத்துறையினர் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் மானை அங்கிருந்து பத்திரமாக மீட்டு கொங்கார்பாளையம் அருகே டி. என் பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட வன எல்லையில் விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி