டி. என். பாளையத்தை அடுத்த கே. என். பாளையம் சத்திரம் புதூர் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் மது குடித்ததாக நீலகிரி மாவட்டம் அறுவன்காடு பகுதியை சேர்ந்த சேகர் (வயது 36). கெந்தி பகுதியை சேர்ந்த ரமேஷ் (53), குன்னூர்மேலூர் பகுதியை சேர்ந்த சரவணன் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.