ஈரோடு மாநகராட்சியில் ரூபாய் 5. 49 கோடி உபரி பட்ஜெட்

66பார்த்தது
ஈரோடு மாநகராட்சியில் ரூபாய் 5. 49 கோடி உபரி பட்ஜெட்
ஈரோடு மாநகராட்சியில் ரூபாய் 5. 49 கோடி உபரி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியத்திடம் மாநகராட்சி நிதி குழு தலைவர் மல்லிகா நடராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2025-26 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் மொத்த வருவாய் ரூபாய் 517. 18 கோடி. செலவு ரூபாய் 512. 18 கோடி.
வரவு: சொத்து வரி ரூபாய் 71. 92 கோடி, தொழில் வரி ரூபாய் 6. 78 கோடி, பத்திரப்பதிவுத்துறை ரூபாய் 7 கோடி, கேளிக்கை வரி 1. 50 கோடி, குத்தகை ரூபாய் 12. 86 கோடி, சேவை மற்றும் இதர கட்டணம்ரூ 58. 29 கோடி, மானியங்கள் மற்றும் கடன்கள் ரூபாய் 260. 48 கோடி, செலவு: ஊதியம் ரூபாய் 98. 05 கோடி ஓய்வூதிய பயன்கள் ரூபாய் 28. 74 கோடி நிர்வாக செலவினம் ரூபாய் 0. 34 கோடி வருவாய் குடிநீர் பழுது பார்த்தல் செலவினங்களுக்காக ரூபாய் 89. 96 கோடி கடன்கள் மற்றும் வட்டி செலவினத்திற்கு ரூபாய் 10. 71 கோடி, மூலதன வேலை பணிகளுக்காக ரூபாய் 269. 51 கோடி.

தொடர்புடைய செய்தி