காலை நேரத்தில் காபி அருந்திய உடன் ஏன் மலம் கழிக்க நேரிடுகிறது என்பது குறித்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் காபியில் உள்ள காஃபைன் என்னும் பொருள் காரணமாகத் தான் இந்த எண்ணம் தூண்டப்படுவதாக தெரியவந்தது. மேலும் காபி அருந்திய உடன் நம் உடலில் அமில உற்பத்தி அதிகரிக்கிறது. இது நம் உணவுகளை உடைத்து எளிதாக ஜீரணம் அடையச் செய்கிறது. இதனாலும் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.