பழனியில் லாரி கவிழ்ந்து விபத்து - உயிர் தப்பிய டிரைவர்

2653பார்த்தது
பழனியில் லாரி கவிழ்ந்து விபத்து - உயிர் தப்பிய டிரைவர்
திண்டுக்கல் மாவட்டம் சின்னகலையம்புத்தூர் அருகே உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று(மே 15) வாழைக்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளத்தில் இருந்து வாழைக்காய் ஏற்றிவந்த நிலையில், சண்முக நதி பாலத்திற்கு அருகில் வேகமாக வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்திவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி