திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெளிநடப்பு
போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில்
வட்டார தலைவர்
சுதர்சன் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணி மாறுதலில் உள்ள
அரசியல் தலையீடு மற்றும் குளறுபடிகளை கண்டித்து மாலை ஒரு மணி நேரம்
ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பு
போராட்டம் நடைபெற்றது. இதில் வட்டார, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.