குழந்தை பெற்றெடுத்த சிறுமி: கணவர் மீது போக்சோ வழக்கு

1019பார்த்தது
அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வெளியூரில் வேலை செய்து தங்கியுள்ளார். அப்போது அங்கு கூலி வேலைக்கு வந்த தாய்மாமன் மகன் சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அரூர் அருகே சதீஷ்குமாரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. பின்னர் சிறுமிக்கு உரிய திருமண வயது வரவில்லை என நேற்று மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், சதீஷ்குமார் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி