மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேமுதிக மனு

588பார்த்தது
மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேமுதிக மனு
விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தொடர்ந்து கடந்த ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேமுதிக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you