கறி சோறு.. இன்பச் சுற்றுலா... ஈரோட்டில் என்ன நடக்கிறது..?

392310பார்த்தது
கறி சோறு, இன்பச் சுற்றுலா என்று கூறி ஈரோடு கிழக்கில் ஒரு பகுதியின் மொத்த வாக்காளர்களையும் திமுகவினர் அழைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும், வாக்காளர்களை அடைத்து வைத்து விருந்து கொடுப்பதாகவும் பிற கட்சிகள், சுயேட்சைகள் குற்றம்சாட்டுகின்றனர்.