கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் தொல்காப்பியர் தெருவை சேர்ந்த பழமலை மகன் கார்த்திகேயன். திருமணமாகாத இவரது வீட்டின் மொட்டை மாடி, சுவர் மீது அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது, அவர் எதிர் பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.