கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்.,16) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது தீர ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் வருவாய்த் துறையின் வாயிலாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.