சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் வரைவதற்கு சேலம் மாவட்டத்தில் இருந்து கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் கக்கன் தலைமையில் ஓவியர்கள் கீரப்பாளையம் ஒன்றியத்திற்க்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன், புவனகிரி சட்டமன்ற தொகுதி செயலாளர் பாவலன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.