திமுக அமைச்சர் மீது கவுன்சிலர் பரபரப்பு புகார்

70பார்த்தது
தூத்துக்குடி மாநாகராட்சியின் 40வது வார்டு திமுக கவுன்சிலர் ரிக்டா தனது கணவருடன் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று (ஜூன் 11) வந்து புகார் மனு அளித்தார். அதில், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அமைச்சர் கீதா ஜீவன் தூண்டுதலின் பேரில் தங்கள் பகுதி திமுக வட்டச் செயலாளர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சொந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர் பெண் அமைச்சர் மீது கொலை மிரட்டல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி