காங்கிரஸ் கட்சியின் திடீர் மனமாற்றம்!

51பார்த்தது
காங்கிரஸ் கட்சியின் திடீர் மனமாற்றம்!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு விவாதங்களில் எங்கள் கட்சித் தலைவர்கள் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும். ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என பதிவிட்டுள்ளார். 24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் திடீர் மனமாற்றத்தால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.