பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் சீமா, காவல்துறை தலைவர் ஜோஷி ஆகியோர் வழிகாட்டுதல்படி கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கோயம்புத்தூர் சிரக காவல்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோரின் மேற்பார்வையில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தல் சரித்திர பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்ற நவீன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
ஏற்கனவே அரிசி கடத்தலில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவரிடம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.