கலப்பட மதுபானம் - குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்

5103பார்த்தது
கலப்பட மதுபானம் - குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் சந்தோஷ்குமார்(42) மற்றும் சத்தியசீலன் மகன் அருண் (29) ஆகியோரை கடந்த 11. 12. 2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் (42) மற்றும் அருண் (29) ஆகிய இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்த வழக்கு குற்றவாளிகளான சந்தோஷ் குமார் (42) மற்றும் அருண் (29) ஆகியோர்களை குண்டர் தடுப்பு (Bootleggers) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி