பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முஹம்மது ரபிக் பேட்டி

61பார்த்தது
கோவையில் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கான இரண்டு ஏக்கர் நிலம் ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கபட்டது.

கோவையில் சாய்பாபாகாலனி, வடகோவை,
கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களது கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கென நிலம் வழங்க கோரி சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை வைத்தனர்.

அவர் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசியதின் அடிப்படையில், இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சங்கனூர் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலத்தை அந்த பகுதி ஜமாத் நிர்வாகிகள் பயன்பாட்டுக்கு வழங்க கோரி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நிலம் ஒப்படைப்பதற்கான அரசு ஆணையை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, கோவை மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் ஹைதர் அலி, அனைத்து ஜமாத் பொதுச் செயலாளர் முகமது அலி, பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோரிடம் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி