நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து - 7 பேர் பலி

50பார்த்தது
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். லோக்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கோர விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி