பிரதமர் மோடி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சென்னை மாதவரத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஒரே இரவில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி மக்களையும் கொடுமைப்படுத்தினார். கொரோனாவை ஒழிக்க விளக்கு ஏற்றக் கூறியும், மணி அடிக்கக் கூறியும் ஏதோ விஞ்ஞானி போல பேசினார் என சாடியுள்ளார்.