சென்னை: புழல் மகளிர் சிறையில் வெளிநாட்டு கைதிகள் செல்போன் கேட்டு தகராறு செய்து பெண் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மகளிர் சிறை காவலர்கள் சாவித்திரி, விதேச்சனா, வெண்ணிலா, சுதா, தாரணி, பானுப்பிரியா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நைஜீரிய பெண் கைதிகள் தங்களது உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூற செல்போன் கேட்டு சிறை காவலர்களிடம் தகராறு செய்தனர்.