சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பயணிக்க கிளாம்பாக்கம் செல்ல வேண்டியிருப்பதால் அரசு விரைவு பேருந்துகளில் பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது, கோயம்பேட்டில் நெரிசலைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்துமுனையம் அமைக்கப்பட்டு, அதனைமுதல்வர் மு. க.
ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, தென் தமிழகம் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளுக்குச் செல்லும் விரைவு பேருந்துகள், கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.