ராகுல் வெளிநாட்டில் அந்நிய சக்திகளை சந்திக்கிறார்: ஹெச். ராஜா

81பார்த்தது
ராகுல் காந்தி வெளிநாடு சென்றபிறகு, அவருடைய ஒருசில நிகழ்ச்சிகள் மட்டுமே வெளிப்படையாக தெரியப்படுத்தப்படுகிறது. மற்றபடி, ராகுல் காந்தி வெளிநாடுகளில் யாரையெல்லாம் சந்திக்கிறார், யாரை தொடர்பு கொள்கிறார் என்பது தெரியப்படுத்தப்படுவதில்லை. ராகுல் காந்தி பேசுகிற இடமெல்லாம், இந்தியாவுக்கு விரோதமாக பேசுகிறார். சீனாவுடன், காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். ராகுல் காந்தியின் பேச்சை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்டவேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது. ஏனென்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி