நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப் போராட்டம் தொடரும்: அமைச்சர்

56பார்த்தது
நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப் போராட்டம் தொடரும்: அமைச்சர்
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து விதமான சட்டப் போராட்டத்தையும் தமிழக அரசு தொடரும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு நீட் தேர்வில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களால் கூட அரசு கல்லுாரிகளில் மருத்துவம் படிக்க முடியாமல் போகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி