மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக வெற்றி பெறாது என வைகோ தெரிவித்துள்ளார். வெள்ளம் வந்த போது எட்டிப் பார்க்காத பிரதமர் தேர்தல் வந்ததும் 9 முறை தமிழகம் வந்துள்ளதாக விமர்சித்துள்ள அவர், எத்தனை முறை யார் வந்தாலும் தேர்தல் களத்தில் பாஜகவுக்கு தோல்வி மட்டுமே கிடைக்கும் என்றார். முன்னதாக மறைந்த மதிமுக எம். பி கணேச மூர்த்தி இல்லத்திற்கு சென்ற வைகோ அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.