Autism Spectrum Disorder சிறப்பு உயர்திறன் மையம் ₹25 கோடி மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும் என்று இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Autism உடையோருக்கு தொடுதிறன் சிகிச்சை, செயல்முறைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி, தொழிற்பயிற்சி ஆகியவையும், அவர்களின் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளருக்கான ஆற்றுப்படுத்துதல் சேவை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் ஆகியவையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.