சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (டிச.31) தடையை மீறி போராட முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நாதக கட்சி சார்பாக நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்திய சீமான் மற்றும் நாதக தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.