அதிவேகத்தில் வந்த கார் ஒன்று ஓட்டலுக்குள் புகுந்த அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குஜராத்தின் நவ்சாரியில் ஞாயிற்றுக்கிழமை அன்று கம்க்வார் பகுதியில் கார் ஒன்று அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரத்தில் இருந்த ஓட்டலுக்குள் திடீரென புகுந்தது. கார் மோதியதில் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களில் மூன்று பேர் காயம் அடைந்தனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.