நாளுக்கு நாள் மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இன்றைய தினம் நாடு முழுவதும் பந்த் நடத்தப் போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த விவகாரத்தை சரி செய்ய புதிய ஆயுதத்தை கையில் எடுக்கவிருக்கிறது மத்திய அரசு. அதாவது, பிரதமரின் கிஸான் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.2000 தவணையை உடனே வழங்கிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக இம்மாத இறுதியில் பணம் வழங்கப்பட இருந்தது.