போலீஸூடன் நடிகை வாக்குவாதம்.. பரபரப்பு வீடியோ

71782பார்த்தது
கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவரை கைது செய்து அழைத்து செல்லும்போது போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்னை கைது செய்கிறீர்கள்? திமுகவை திருப்திபடுத்துவதற்காக பாஜகவை சேர்ந்த என்னைப்போன்ற நிரபராதிகளை நீங்கள் ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வியெழுப்பினார். மேலும் பாஜகவில் பொறுப்பாளராக இருப்பதை தவிர வேற எந்த தப்பும் பண்ணவில்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி