ஆம் ஆத்மி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

57பார்த்தது
ஆம் ஆத்மி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே மார்ச் 31 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இதைக் கண்டித்து ஏப்ரல் 7 ஆம் தேதி ஆம் ஆத்மி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி