உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பிப்ரவரி 16-ம் தேதி நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஒரு சிறுவன் 7 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, பின்னர் சிறுமியைக் கொல்ல முயன்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரண்டு சிறுமிகள் கூரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களது பலூன் தரையில் விழுந்தது. அதை அவர்கள் எடுக்க சென்ற போது இந்த கொடூரம் நடந்துள்ளது. குறித்த நேரத்தில் சிறுமியின் தாய் வந்து குழந்தையை காப்பாற்றியதாக போலிஸார் தெரிவித்தனர்.